அழைப்பு வந்தால் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்

சென்னையில் வரும் 30ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி நினைவஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அகில இந்திய அளவில் பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்த போது, திமுக ஏற்பாடு செய்துள்ள நினைவேந்தல் கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், நினைவஞ்சலி கூட்டத்திற்கு அதிமுகவுக்கு அழைப்பு வந்தால் உயர்மட்ட குழுவில் அதற்கான முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Exit mobile version