கணவர் எனத் தெரியாமல் சிகிச்சை – கதறியழுத செவிலியர்

ஓமலூரை அடுத்த மேச்சேரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி சிவகாமி அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற சீனிவாசன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உயிருக்கு போராடிய அவர் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்களும் செவிலியர்களும் சிகிச்சை அளித்தனர். கணவர் என்று தெரியாமல் சிவகாமியும் ரத்தக்கறையை துடைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது விபத்தில் சிக்கியவரின் கையில் இருந்த மோதிரத்தை பார்த்து தனது கணவர் என்பதை அடையாளம் கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார்.

தலையில் சுற்றி இருந்த துணிகளை அகற்றி பார்த்துவிட்டு சிவகாமி கதறி அழுதது அனைவரையும் கலங்கச் செய்தது. சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்ததால் சிவகாமி நிலைகுலைந்துபோனார்.

Exit mobile version