ஐஎஸ்எல் கால்பந்து போட்டி- கோவாவிடம் சென்னை வீழ்ந்தது.

 

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நேற்றைய போட்டியில் சென்னையின் எஃப்சி அணியும் எஃப்சி கோவா அணியும் மோதின. இதில், போட்டி தொடங்கிய 12-ஆவது நிமிடத்திலேயே கோவா அணி முதல் கோல் அடித்து ஆதிக்கம் செலுத்தியது. கோவா அணி வீரர் எடு பெடியா இந்த கோலை அடித்தார்.

இதற்கு பதிலடி தர சென்னை விரும்பியது. இருப்பினும் சென்னை அணியால் கோல் போட முடியவில்லை. முதல் பாதி ஆட்ட நேர முடிவில் கோவா அணி 1-0 என முன்னிலை வகித்தது.

2-ஆவது பாதி ஆட்டம் தொடங்கி 8-ஆவது நிமிடத்தில் மீண்டும் கோவா அணி ஒரு கோல் போட்டது. இதனால், சென்னை அணி மீண்டும் நெருக்கடிக்குள்ளானது. இதையடுத்து, போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டியின் 80-ஆவது நிமிடத்தில் கோவா அணி மீண்டும் ஒரு கோல் போட்டு போட்டியில் வலுவான முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து, போட்டி முடிவதற்கான 90-ஆவது நிமிடம் வரை சென்னை அணியால் கோல் போட முடியவில்லை.

இந்நிலையில், போட்டியில் கூடுதலாக 6 நிமிடம் வழங்கப்பட்டது. அதில், 5-ஆவது நிமிடத்தில் சென்னை அணி வீரர் சேபியா ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார்.

இதன்மூலம், இந்தப் போட்டியின் முடிவில் எஃப்சி கோவா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தியது.

Exit mobile version