News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

எஸ் – 400 ஏவுகணை சிறப்பம்சங்கள்

Web Team by Web Team
October 6, 2018
in TopNews, அரசியல், இந்தியா, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
எஸ் – 400  ஏவுகணை சிறப்பம்சங்கள்
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. எதிர்ப்பையும் மீறி வாங்க வேண்டிய அளவுக்கு எஸ்-400 ஏவுகணையில் அப்படி என்ன சிறப்பு,… இதோ அறிந்து கொள்வோம்..

 இந்தியாவின் எல்லையானது பாகிஸ்தான், சீனா, நேபாளம், பூட்டான், வங்காளதேசம் ஆகிய நாடுகளுடன் சுமார் 4000 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. எனவே எல்லை பாதுகாப்பில் இந்திய ராணுவப்படையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. எதிரி நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஆயுதங்களை வாங்குவதும், அதிநவீன ஆயுதங்களை உற்பத்தி செய்வதும் உலக நாடுகளில் வழக்கமான ஒன்று. அதைத்தான் இந்தியாவும் செய்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி என்ற ஏவுகணை இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டு பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் போதாதென்று தான், தற்போது எஸ்-400 ஏவுகணை வாங்க ஒப்பந்தம் கையழுத்தாகியுள்ளது.

எஸ் – 400 என்றால் surface – 400 என்று பொருள். அதாவது தரையில் இருந்து புறப்பட்டு 400 கி.மீ. பயணித்து தாக்க வரும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஆற்றல் பெற்றது இதன் சிறப்பம்சம். உலகிலுள்ள மிகவும் அதிநவீன ஏவுகணை தளவாடங்களில் ஒன்றாக ரஷ்யாவின் எஸ் – 400 கருதப்படுகிறது. ஒரு எஸ்-400 தொகுதியில் 8 ஏவுகலன்களும், 112 ஏவுகணைகளும் இருக்கும். இதுபோன்ற 4 தொகுதிகளை தான் இந்தியா வாங்குகிறது. எதிரி நாடுகளின் ஏவுகணை தாக்குதலில் இருந்து, இந்தியாவின் முக்கிய நகரங்களை காக்கும் வகையில், இந்த தளவாடங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்தியா இந்த ஏவுகணைகளை வாங்க அமெரிக்கா ஏன் எதிர்க்க வேண்டும். உக்ரைன் நாட்டின் கிரீமியா தீவை சமீபத்தில் ரஷ்யா ஆக்ரமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது. அந்நாட்டுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. இதற்காக “பொருளாதார தடைகள் மூலம் அமெரிக்கா எதிரி நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை” என்ற சிறப்பு சட்டத்தையும் இயற்றியது. ஆனால் இது ஐ.நா.சபையின் சட்டம் ஒன்றும் அல்ல, அமெரிக்காவின் சட்டம் தான் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. எனவே தான் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க ஏவுகணையின் விலை என்ன தெரியுமா?. இந்திய மதிப்பில் 40 ஆயிரத்து 300 கோடி ரூபாய் கொடுத்து இந்த ஏவுகணைகளை வாங்குகிறது இந்தியா. சுகாதாரத்திற்கும், கல்விக்கும் பெரும் நிதியை ஒதுக்க வேண்டிய சூழலில் இருந்தாலும், ஆயுதங்களே ஜனநாயகத்தை காக்கும் அரண்களாக திகழ்கிறது. அந்த வகையில் எல்லையில் உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

Tags: butinIndiaPMMODIRussias400
Previous Post

உச்சநீதிமன்ற தீர்ப்பு – நடிகர் சுரேஷ்கோபி எதிர்ப்பு

Next Post

நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

Related Posts

விராட் கோலிக்கு “மேன் ஆஃப் த மேட்ச்” கொடுத்திருக்கக் கூடாது! – கவுதம் கம்பீர் சர்ச்சை!
இந்தியா

விராட் கோலிக்கு “மேன் ஆஃப் த மேட்ச்” கொடுத்திருக்கக் கூடாது! – கவுதம் கம்பீர் சர்ச்சை!

September 12, 2023
இந்த வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரம்!.. செப் 1 முதல் 7 வரை.. தேசிய ஊட்டச்சத்து வாரத்தினை கடைபிடிக்கும் இந்தியா!
இந்தியா

இந்த வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரம்!.. செப் 1 முதல் 7 வரை.. தேசிய ஊட்டச்சத்து வாரத்தினை கடைபிடிக்கும் இந்தியா!

September 1, 2023
பஞ்சாபியர்களின் வெளிநாட்டு மோகம்! ஒப்பந்தமுறை திருமணம் மூலம் வெளிநாட்டிற்கு சிட்டாக பறக்கும் பஞ்சாபியர்கள்!
இந்தியா

பஞ்சாபியர்களின் வெளிநாட்டு மோகம்! ஒப்பந்தமுறை திருமணம் மூலம் வெளிநாட்டிற்கு சிட்டாக பறக்கும் பஞ்சாபியர்கள்!

August 31, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! மகளிர் உரிமைத்தொகைக்கு SC,ST மக்களின் நல நிதியைப் பயன்படுத்திய ஸ்டாலின்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாத ஸ்டாலின் INDIA -வையா காப்பாற்றப் போகிறார்?

August 31, 2023
ஆசியக் கோப்பை யாருக்கு? இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!
விளையாட்டு

ஆசியக் கோப்பை யாருக்கு? இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!

August 30, 2023
என்ன “பாசமலர்களே” நலமா? நாடு முழுவதும் இன்று “ரக்‌ஷா பந்தன்” கொண்டாட்டம்!
இந்தியா

என்ன “பாசமலர்களே” நலமா? நாடு முழுவதும் இன்று “ரக்‌ஷா பந்தன்” கொண்டாட்டம்!

August 30, 2023
Next Post
நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version