உயிருக்கு ஆபத்து – நிர்மலாதேவி! 

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி சிபிசிஐடி தரப்பில் 1130 பக்கம் கொண்ட முதல் கட்ட குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

செப்டம்பர் 7ஆம் தேதி  200 பக்கம் கொண்ட இறுதிக்கட்ட குற்றப்பத்திரிகை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

 இந்நிலையில் 1360 பக்கங்கள் கொண்ட முழுமையான குற்றப்பத்திரிக்கை நகல் இன்று   மூவருக்கும்  வழங்கப்பட்டது.

 தொடர்ந்து அவர்கள் மூவரையும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் 2ல் ஆஜர்ப்படுத்த நீதித் துறை நடுவர் திலகேஸ்வரி உத்தரவிட்டார். 

இதனிடையே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நீதிபதியிடம் நிர்மலாதேவி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

Exit mobile version