இலங்கையில் குவியல் குவியலாக மனித எலும்பு கூடுகள்

இலங்கையின் மன்னார் பகுதியில் பல்பொருள் விற்பனை அங்காடி கட்டுவதற்காக கட்டட பணிகள் நடைபெற்றன. அப்போது சில அடி ஆழத்தில் ஏராளமான மனித எலும்பு கூடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 102 எலும்புக் கூடுகல் அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதியுள்ள எலும்பு கூடுகள் சேகரிக்கப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை மீண்டும் முன்னெடுக்க வேண்டுமென்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Exit mobile version