இம்ரான் கானின் உண்மை முகம் வெளிப்பட்டது – பேச்சு வார்த்தையை ரத்து செய்தது இந்தியா

சமீபத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தியா – பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் எனவும்,  இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஐநா பொது சபை கூட்டத்தின் போது, இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், இந்தியாவின் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் அத்துமீறல், என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தைகள் முடங்கியே உள்ளன.

இதுதொடர்பாக, கருத்து தெரிவித்த வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், ஜம்மு காஷ்மீரில் மூன்று போலீஸ் அதிகாரிகளை பயங்கரவாதிகள் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளதாகவும், இம்ரான் கான் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் அவருடைய உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளதாகவும், 

இதனையடுத்து பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version