இந்திய போர் விமானங்களின் தகவல் தொடர்பு பலப்படுத்தப்படும்: விமானப்படைத் தலைவர்

இந்திய போர் விமானங்கள் அனுப்பும் தகவல்களை யாராலும் கேட்க இயலாத வகையில், தகவல் தொடர்பு பலப்படுத்தப்படும் என விமானப்படைத் தலைவர் ராகேஷ் பதூரியா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானில் விழுந்த அபிநந்தன் விமானத்தின் தகவல் தொடர்பை அந்நாட்டு ராணுவம் துண்டித்ததா என்று கேள்விக்கு விளக்கம் அளித்தார். போர் விமானங்கள் அனுப்பும் தகவல்களை பாதுகாப்பாக மேற்கொள்ள தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ராகேஷ் பதூரியா விளக்கம் அளித்தார்.

Exit mobile version