ஆதாருடன் ரேசன் அட்டையை இணைக்க அக். 31 வரை காலக்கெடு!

போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்க கடந்த ஆண்டு மாதம் முதல் ஆதார் எண் ரேஷன் கார்டுகளுடன் இணைக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், ஸ்மார்ட் கார்டுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. ஆதார் அட்டையில் தனி நபரின் விழி, விரல் ரேகை ஆகியவை பதிவாகி உள்ளன. இதனால் சுமார் 5 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ரேஷன் அட்டையில் இதுவரை ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31-ந் தேதிக்குள் ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version