News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

"அண்ணாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்குவது பற்றிய நல்ல செய்தி மத்திய அரசிடம் இருந்து வரும்"

Web Team by Web Team
September 14, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
"அண்ணாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்குவது பற்றிய நல்ல செய்தி மத்திய அரசிடம் இருந்து வரும்"
Share on FacebookShare on Twitter

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி, வெற்றி மேல் வெற்றி பெறுவோம் என்று அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், அண்ணாவின் 30 வருட பொது வாழ்வு  நாட்டின் அரசியல் போக்கை மாற்றியதாக கூறியுள்ளனர்.

மாநிலக் கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்க முடியும் என்பதை முதன்முதலாக அண்ணா நிகழ்த்திக்காட்டினார் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அண்ணா ஏற்படுத்திய புரட்சியின் விளைவாகவே முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரால் சிறப்பான ஆட்சிகளை நடத்திக்காட்ட முடிந்தது என்று இருவரும் கூறியுள்ளனர்.

தமிழக முன்னேற்றத்துக்காக அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்தளித்த பாதையில் அரசு தொடர்ந்து நடைபோடும் என்ற உறுதியை, அண்ணா பிறந்தநாளில் தெரிவித்துக்கொள்வதாக ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

அண்ணாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்குவது பற்றிய நல்ல செய்தி மத்திய அரசிடம் இருந்து வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில் அஇஅதிமுக மக்கள் தொண்டாற்ற உறுதியேற்று, அரசைக் காத்து, மக்களிடையே நற்பெயர் பெற்று, அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெறுவது அவசியம் என்பதை தொண்டர்களுக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருப்பதாகவும் கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: letter to volunteersஇபிஎஸ்ஒபிஎஸ்
Previous Post

20 அடி பள்ளத்தில் விழுந்த பசு!

Next Post

பொய் குற்றச்சாட்டில் கைதான விஞ்ஞானிக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு!

Related Posts

No Content Available
Next Post
பொய் குற்றச்சாட்டில் கைதான விஞ்ஞானிக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு!

பொய் குற்றச்சாட்டில் கைதான விஞ்ஞானிக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version