News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பிரதமர் மோடியின் கனவு திட்டம், நிறைவேறுமா என சந்தேகம்!

Web Team by Web Team
September 26, 2018
in TopNews, இந்தியா
Reading Time: 1 min read
0
பிரதமர் மோடியின் கனவு திட்டம்,  நிறைவேறுமா என சந்தேகம்!
Share on FacebookShare on Twitter

மும்பை – அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில்  பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் விவசாயிகள் காட்டிய எதிர்ப்பால் இத்திட்டத்திற்கான நிதியுதவியை ஜப்பான் அரசு நிறுத்தி வைத்துள்ளது. 

இந்தியாவில் புல்லட் ரயிலை கொண்டுவர வேண்டும் என மத்திய அரசு நீண்ட காலமாக முயற்சித்தது. ஜப்பான் நாட்டுடன் கரம் கோர்த்து இந்தியாவில் புல்லட் ரயிலை இயக்குவது என முடிவு செய்யப்பட்டது.

முதற்கட்டமாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகராஷ்டிர தலைநகர் மும்பை வரை புல்லட் ரயிலை அறிமுகப்படுத்த திட்டமிட்டப்பட்டது. 

கடந்த மே மாதம், பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் இணைந்து இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

97, 636 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஜப்பான் நாட்டின் JICA என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் NHSRCL என்ற நிறுவனம் புல்லட் ரயில் திட்டத்தை முன்னெடுக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்காக குஜராத் மற்றும் மகாராஷ்டிர பகுதிகளில் நிலங்களை அளவிடும் பணிகள் தொடங்கியது.

குஜராத்தில் 8 மாவட்டங்களில் 850 ஏக்கர் நிலமும், மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தில் 108 கி.,மீ. தொலைவிலான நிலத்தையும் கையகப்படுத்தும் பணிகள் துவங்கின.

ஆனால், விளை நிலங்களை விட்டுக்கொடுக்க முன்வராத விவசாயிகள், இழப்பீடும் குறைவாக இருப்பதாக குற்றம்சாட்டினர்.

தொடர் போராட்டங்கள் காரணமாக இத்திட்டத்திற்கான நிதியுதவியினை தற்காலிகமாக நிறுத்திவைத்தது ஜப்பான் அரசு.

அதேசமயம், விவசாயிகளின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி, புல்லட் ரயில் திட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மத்திய அரசு.

புல்லட் ரயில் சீறிப்பாயுமா?… விவசாயிகள் எதிர்ப்புக்கு முன் மண்டியிடுமா? என்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது.  

Tags: bullet train projectPM Modi
Previous Post

"வீடு புகுந்து வெட்டிக்கொலை"

Next Post

இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த போது ஒவ்வொரு தமிழர்களும் அழுதார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

Related Posts

NDA Meeting! பிரதமர் மோடிக்கு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார் பொதுச்செயலாளர்!
அரசியல்

NDA Meeting! பிரதமர் மோடிக்கு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார் பொதுச்செயலாளர்!

July 18, 2023
Sickle Cell Anaemia (SCA) Elimination Mission 2047! இந்தியாவை அச்சுறுத்தும் இந்த நோயின் பின்னணி என்ன?
இந்தியா

Sickle Cell Anaemia (SCA) Elimination Mission 2047! இந்தியாவை அச்சுறுத்தும் இந்த நோயின் பின்னணி என்ன?

July 4, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! ஒடிசா ரயில் விபத்து..ஸ்டாலின் செல்லாமல் தன் மகனை அனுப்பியது ஏன்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! ஒடிசா ரயில் விபத்து..ஸ்டாலின் செல்லாமல் தன் மகனை அனுப்பியது ஏன்?

June 4, 2023
புதிய நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த தமிழ்!
இந்தியா

புதிய நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த தமிழ்!

May 29, 2023
சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் 8-ந் தேதி திறந்து வைக்கிறார்.
அரசியல்

சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் 8-ந் தேதி திறந்து வைக்கிறார்.

April 7, 2023
இராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை..!
அரசியல்

இராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை..!

March 23, 2023
Next Post
இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த போது ஒவ்வொரு தமிழர்களும் அழுதார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த போது ஒவ்வொரு தமிழர்களும் அழுதார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version