திருடர்களை வளைத்த பிடித்த பலே போலீசார்

சென்னை கொளத்தூரில் உள்ள ராஜா பாதர் தெருவில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீதரை தாக்கிய 2 பேர், அவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையை துரிதப்படுத்தினர். அப்பகுதியில், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, குறிப்பிட்ட ஆட்டோவின் எண் தெரியவந்தது. அதன்மூலம், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். புளியந்தோப்பு காவல் ஆணையர் சாய் சரண் தேஷாய் தலைமையில், தனி குழு அமைத்து, 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். குற்றம் நடந்த 20 மணி நேரத்தில், குற்றவாளிகளை பிடித்த போலீசாரை, காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.

Exit mobile version