News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தமிழக மீனவர்களை தாக்குவது யார்? கடற்கொள்ளையர்களா? இலங்கை கடற்படையா?

Web Team by Web Team
September 29, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தமிழக மீனவர்களை தாக்குவது யார்? கடற்கொள்ளையர்களா? இலங்கை கடற்படையா?
Share on FacebookShare on Twitter

தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் 3வது நாளாக 2 கிராம மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது சக மீனவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது முதல், தமிழக மீனவர்களை, இலங்கை கடற்பரை துப்பாக்கியால் சுடுவதும், விரட்டி அடிப்பதும், சிறைபிடிப்பதும், மீனவர்களின் படகுகளை சிறைப்பிடிப்பதும் தொடர்கதையாகி வந்தன. இதனால், பல ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக பேச்சவார்த்தை நடைபெற்று வந்தன. ஒவ்வொரு முறை பேச்சுவார்த்தை நடைபெறும்போதும், நல்லண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வந்தனர். இதனையடுத்து, அடுத்தடுத்த சில நாட்களில் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் , இலங்கை கடற்படையால் மீண்டும் மீண்டும் சிறைப்பிடிக்கப்படுவது தொடர் கதையாகி வந்தது. இதனால், இருநாட்டு உறவில் விரிசல் ஏற்படும் அளவுக்கு, அந்த பிரச்சனை பெரிய அளவில் விஸ்வ ரூபம் எடுத்தது.

RelatedPosts

No Content Available

தற்போது தமிழக மீனவர்கள் புதிய வடிவிலான பிரச்சனையை கடந்த சில நாட்களாக எதிர்கொண்டு வருகின்றனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் என்ற பெயரில், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.

நாகை மாவட்டம் நாகூர் மீனவ கிராமத்தில் இருந்து கண்ணன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், அவர் உட்பட 6 மீனவர்கள் அதிகாலை கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேக படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த சிங்கள கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்களின் படகை சுற்றி வளைத்து, அவர்களை பயங்கர ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் நாகூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு தலை, கை, கால்களில் அரிவாள் வெட்டு விழுந்து; கை, கால்கள் முறிந்தது. இந்த தாக்குதலில் அந்த மீனவர் படகிலேயே ரத்த வௌ்ளத்தில் மயங்கி விழுந்தார்.

மீனவர்களை தாக்கி விட்டு, படகில் இருந்த 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன், வலை, புளுடூத் உள்ளிட்ட கருவிகளை பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்கள், நாகை துறைமுகம் திரும்பிய நிலையில், படுகாயமடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடிக்கொண்டிருந்த செருதூரை சேர்ந்த 3 மீனவர்கள் மீதும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில், அவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே படுகாயமடைந்த மீனவர்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, கடற்கொள்ளையர்கள் பிரச்சனைக்கு முடிவு கட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் அவர் உறுதி அளித்தார். மீனவர்கள் தாக்கபடுவது குறித்து தமிழக அரசு, மத்திய அரசிடம் உரிய அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், தமிழக கடற்பகுதியில் இந்திய கடலோர காவல்படையினரின் ரோந்து பணியை தீவிர படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். தமிழக மீனவர்களை தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்கள், இலங்கை சிங்கள மீனவர்கள்தான் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இதனிடையே, ஒரே வாரத்தில் நாகை மீனவர்கள் சிங்கள கடற்கொள்ளையர்களால் அடுத்தடுத்து தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் சம்பவம், தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தமிழக மீனவர்களை தாக்கியது கடற்கொள்ளையர்களா அல்லது மாறுவேடத்தில் வரும் இலங்கை கடற்படையினரா என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags: tamilnadu fishermen attacked
Previous Post

மனைவியின் இறப்புச் செய்தி ஒரு பக்கம், கட்சி பணி மறு பக்கம்… எதை தேர்வு செய்தார் எம்.ஜி.ஆர்.?

Next Post

டெங்குவை ஒழிக்க அதிரடி ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

Next Post
டெங்குவை ஒழிக்க அதிரடி ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

டெங்குவை ஒழிக்க அதிரடி ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist