சிறையில் செல்போன்கள் – அதிகாரிகள் அதிரடி ஆய்வு

 

புழல் சிறையில் செல்போன் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா மற்றும் டிஐஜி கனகராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது ரியாஸ் மற்றும் அவரது கூட்டாளியான மாதவன் ஆகிய இருவரும் சிறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில் சிறைத்துறை எடிஜிபி அசுதோஷ் சுக்லா மற்றும் டிஐஜி கனகராஜ் ஆகியோர் புழல் சிறையில் அதிரடி ஆய்வு நடத்தினர். இந்த சோதனையின் போது 3 செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. செல்போன்களை சிறைக்குள் கொண்டு வந்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Exit mobile version