News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஒருவேளை, எம்.ஜி.ஆர். மேலும் சில காலம் உயிருடன் இருந்திருந்தால்..?!

Web Team by Web Team
September 29, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஒருவேளை, எம்.ஜி.ஆர். மேலும் சில காலம் உயிருடன் இருந்திருந்தால்..?!
Share on FacebookShare on Twitter

1983-ம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கையின் வெலிக்கடை சிறையில் 37 தமிழர்கள் கொல்லப்பட்டது கண்டு மனம் வெதும்பினார் எம்ஜிஆர். இதனை ஐ.நா.சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

ஈழத்தமிழர்களுக்காக மாநில அரசின் சார்பில் முழுஅடைப்பு போராட்டத்தை நடத்தினார். அவர்களின் துயர்துடைக்க 20 லட்ச ரூபாயை கொடுத்துதவினார். 2 விமானங்களில் உதவி பொருட்களையும் 24 டன் உணவுப் பொருட்களையும் அனுப்பி வைத்தார். இதையடுத்து ஈழ தமிழ்த்தலைவர்கள் சென்னை வந்து எம்ஜிஆருக்கு நேரில் நன்றி தெரிவித்தனர்.

எம்ஜிஆரின் அறிவுரையின் பேரில் ஐ.நா.சபையில் பண்ருட்டி ராமச்சந்திரன் ஈழத்தமிழர்கள் பிரச்னை குறித்து எடுத்துரைத்தார். இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் எம்ஜிஆர்.

1984-ம் ஆண்டு தமிழக மருத்துவக்கல்லூரிகளில் ஈழத் தமிழ் மாணவர்களுக்கு இடம் வழங்க வழிவகை செய்தார் எம்ஜிஆர். அதுமட்டுமல்லாது தனது தலைமையில் கொட்டும் மழையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து 1986-ம் ஆண்டு மே மாதம் இரண்டாவது முறையாக மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டத்தை முன்னெடுத்தார் எம்ஜிஆர். ஈழ தமிழ் அகதிகளுக்கு அரசு சார்பில் இலவசமாக நிலம் வழங்க உத்தரவிட்டார்.

1987-ம் ஆண்டு சென்னை வந்த விடுதலைப்புலிகள் முதலமைச்சர் எம்ஜிஆரை நேரில் சந்தித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ஈழத்தமிழர்களுக்கு உதவ 4 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கினார் எம்ஜிஆர். இதற்கு தனிப்பட்ட முறையில் எம்ஜிஆருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். எம்ஜிஆரின் முயற்சியால் இலங்கை அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி யாழ்ப்பாணத்திற்கு நேரடியாக உணவுப்பொருள் விநியோகிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் வீதிகளில் எம்ஜிஆர் புகழ் ஓங்குக என முழக்கம்.

எம்ஜிஆர் ஆசியுடன் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் டெல்லி வந்தடைந்தார். டெல்லியில் எம்ஜிஆருடன் பிரபாகரன் 3 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார். எம்ஜிஆர் எடுத்த தொடர் முயற்சிகளால் இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால் எதிர்பாராதவிதமாக 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி எம்ஜிஆர் காலமானார். ஒருவேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் அவர் காலகட்டத்திலேயே ஈழத்தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: LTTEMGR Century Curveprabhakaran
Previous Post

தமிழ் இலக்கியத்தின் வாடிவாசல் – சி.சு.செல்லப்பா

Next Post

இந்தியாவை மிகவும் பிடிக்கும் – டோனால்ட் டிரம்ப்!

Related Posts

இலங்கையில் பதற்றமான சூழல் நீடித்தால் மற்றொரு பிரபாகரன் உருவாகலாம்: அதிபர் சிறிசேன
TopNews

இலங்கையில் பதற்றமான சூழல் நீடித்தால் மற்றொரு பிரபாகரன் உருவாகலாம்: அதிபர் சிறிசேன

June 10, 2019
இதயக்கனி எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு அம்மா
TopNews

இதயக்கனி எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு அம்மா

December 5, 2018
ஈழ மக்களின் போராளி பிரபாகரன் பிறந்தநாள்
TopNews

ஈழ மக்களின் போராளி பிரபாகரன் பிறந்தநாள்

November 26, 2018
சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் – முதலமைச்சர் அறிவிப்பு
TopNews

சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் – முதலமைச்சர் அறிவிப்பு

September 30, 2018
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு
TopNews

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

September 30, 2018
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: பாதுகாப்பு பணியில் 17 ஆயிரம் போலீசார்
TopNews

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: பாதுகாப்பு பணியில் 17 ஆயிரம் போலீசார்

September 30, 2018
Next Post
இந்தியாவை மிகவும் பிடிக்கும் – டோனால்ட் டிரம்ப்!

இந்தியாவை மிகவும் பிடிக்கும் - டோனால்ட் டிரம்ப்!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version