வாணியம்பாடி அருகே நாட்டுத் துப்பாக்கியால் இளைஞர் சுட்டுக்கொலை

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாட்டுத் துப்பாக்கியால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வாணியம்பாடி அருகே உள்ள தகரக்குப்பத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்து என்பவரின் மகன் சக்திவேல். இரு நாட்களுக்கு முன் வெளியில் சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்துப் பெற்றோரும் உறவினரும் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். இந்நிலையில் தகரக்குப்பம் மலைப்பகுதியில் மார்பில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சக்திவேல் உடல் கிடந்ததைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்துத் திம்மாம்பேட்டை காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிக் கூறாய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சக்திவேல் அவரது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. வேட்டையாடுவதில் ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டாரா? என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version