தேர் திருவிழாவிற்கு சென்ற இளைஞர் வெட்டி படுகொலை

சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற மாதா கோயில் திருவிழாவில், முன்விரோதம் காரணமாக 19 வயது இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை செனாய் நகரை சேர்ந்த பென்னிராஜ் என்பவர் குடும்பத்துடன், பெசன்ட் நகர் அன்னை மாதா கோயில் தேர் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத சிலர், பென்னிராஜை சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சத்தத்தை கேட்டு வந்த அங்கிருந்தவர்கள், பென்னிராஜை மீட்டு 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து, தகவலறிந்து வந்த காவல் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மேலும் முன் விரோதம் காரணமாக நண்பர்களே சேர்ந்த கொலை செய்தாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பென்னிராஜின் நண்பர்கள் இருவரை தேடி வருகின்றனர்.

Exit mobile version