கடையம் அருகே இளைஞர் குத்திக்கொலை

நெல்லை மாவட்டம் கடையம் அருகே கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். புலவனுரை சேர்ந்த முத்துசெல்வனை இரவில் தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் காட்டு பகுதிக்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற முத்துசெல்வன், அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் முத்துசெல்வன் பாட்டிலால் குத்தி கொல்லப்பட்டார். இந்த கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version