சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது

முகநூல் மூலம் அறிமுகமான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தஞ்சாவூரைச் சேர்ந்த நபரை, போலீசார் போக்ஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம், தஞ்சாவூரை சேர்ந்த 32 வயதான கமலக்கண்ணன் என்பவர், மூகநூல் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமாகியுள்ளார். முகநூல் மூலம் தொடர்ந்து பேசி வந்த கமலக்கண்ணன், சிறுமியிடம், அவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய சிறுமியும், கமலக்கண்ணனிடம் நெருங்கி பேச ஆரம்பித்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய குரூர எண்ணம் கொண்ட நயவஞ்சகன், சிறுமியிடம் அரைகுறை ஆடைகளுடன, வீடியோ எடுத்து தனக்கு அனுப்பும்படி கேட்டுள்ளார். காதல் கண்ணை மறைத்ததால், சிறுமியும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.

சிறுமியின் நடவடிக்கையில் சதேகமடைந்த பெற்றோர், அவரது செல்போனை எடுத்து ஆராய்து பார்த்ததில், கமலகண்ணனுக்கு வீடியோக்களை அனுப்பியதும், அதை வைத்து அவர் சிறுமியை தன்னை காதலிக்கும்படி மிரட்டியதும் செல்போனில் பதிவாகியிருந்தது. மேலும், தன்னை காதலிக்காவிட்டால், சிறுமியின் நிர்வாண வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவேன் என அந்த நபர் மிரட்டியுள்ளதும் தெரியவந்தது.

இதனை பார்த்து அதிர்ந்துபோன சிறுமியின் பெற்றோர், முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் கமலகண்ணனை குறித்து புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து, முகநூல் கணக்கு மற்றும் அதிலிருந்த செல்போன் எண்ணை வைத்து, திருபூரில் இருந்த கமலக்கண்ணனை, புதுச்சேரிக்கு அழைத்துவந்து, விசாரணை நடத்தியதில், திருப்பூரில் ஒரு சாயபட்டரை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் அவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளதும், சிறுமியை அவர் மிரட்டியதும் தெரியவந்தது. இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Exit mobile version