இளம் பெண்ணிடம் காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி நகை பறிப்பு!

சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், APP மூலம் தனது விபரங்களையும், பிரிந்து சென்ற தனது காதலனின் விபரங்களையும் பதிவிட்டுள்ளார். பின்னர் இவரை 2 இளைஞர்கள் தொடர்பு கொண்டு காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி 40 சவரன் தங்க நகைகளை பெற்று சென்றுள்ளனர். சில நாட்கள் கழித்து மீண்டும் அவர்கள் அந்த பெண்ணிடம், 5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் அப்பெண்ணிடம், பணம் தருவதாக கூறி மோசடி நபர்களை விமான நிலையம் வரவழைக்க அறிவுரை வழங்கியுள்ளனர். இதனையடுத்து விமான நிலையம் வந்த அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் என்பதும், இதுபோன்று பலரிடம் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

Exit mobile version