மகளை திருமணம் செய்து தர மறுத்த தாயை வெட்டி கொன்ற வாலிபர்

மகளை திருமணம் செய்து தர மறுத்த தாயை கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை கிண்டி நரசிங்கபுரத்தை சேர்ந்த ரேவதி என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மகள் ஜீவிதாவை வினோத் என்பவருக்கு திருமணம் செய்ய கடந்த ஒராண்டுக்கு முன் நிச்சயிக்கப்பட்டது. இதனிடையே, வினோத் நடவடிக்கை சரியில்லை என கூறி திருமணம் செய்து கொடுக்க ரேவதி மறுத்ததாக கூறப்படுகிறது.

தனக்கு ஜீவிதாவை திருமணம் செய்து தருமாறு ரேவதியிடம் வினோத் தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில், இரவு பணியை முடித்துவிட்டு வந்த ரேவதியை தனது நண்பர்களுடன் வழிமறித்த வினோத், கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதனால் ரேவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கிண்டி போலீசார், தப்பி ஒடிய வினோத் உள்பட 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version