இளைஞரை கத்தியால் வெட்டும் திமுக பிரமுகரின் மகன்

சென்னையில் பொதுமக்கள் மத்தியில் இளைஞர் ஒருவரை திமுக பிரமுகரின் மகன் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை ராயப்பேட்டை மீர் சாகிப்பேட்டை மார்கெட் பகுதியில் இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கி கத்தியால் வெட்டி விட்டு சென்றது. இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்பொழுது சமூக வலைத்தளங்களில் அந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞரை கத்தியால் வெட்டும் நபரின் தந்தை திமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version