மது போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்து கொலை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மது போதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தமிழகம் மற்றும் வட மாநில இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தொழிற்சாலையில்
பணியாற்றுவதற்காக வட மாநிலத்தினர் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நக்கமங்கலம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.இந்நிலையில் நேற்று இரவு நண்பர்கள் அனைவரும் வீட்டின் மாடியில் மது அருந்தும் போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நாகர்கோயிலை சேர்ந்த ரகுவரன் என்ற இளைஞரை மற்ற நண்பர்கள் மது போதையில் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

Exit mobile version