விருத்தாசலம் அருகே காட்டினுள் அழுகிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

விருத்தாசலம் அருகேயுள்ள காட்டினுள், இளம் பெண்ணின் சடலம் ஒன்று எரிந்து அழுகிய நிலையில் கிடந்தது, அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வயலூர் ஏரிக்கு அருகாமையில் சுமார் 2 கிலோ மீட்டர் பரப்பளவில் காப்புக்காடு அமைந்துள்ளது. இக்காட்டின் உள்ளே அழுகிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் கிடப்பதாக விருத்தாச்சலம் காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது. தகவல் வந்ததன் பேரில் விரைந்து வந்த விருத்தாச்சலம் காவல் துணை கண்கானிப்பாளர் தீபா சத்யன் மற்றும் காவல் ஆய்வாளர் ஷாகுல் அமீது தலைமையில் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அப்பெண்ணின் உடலை பார்த்து விசாரணை மேற்கொண்டனர்.

இவ்விசாரணையில் அப்பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையிலும், மீதம் உள்ள உடல் அழுகிய நிலையில் கிடப்பதால், அப்பெண் இறந்து ஒரு வாரத்திற்கும் மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அக்காட்டின் அருகே தனியார் கல்லூரி இயங்கி வருவதால், இறந்த பெண் கல்லூரி மாணவியா? என்ற கோணத்திலும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு நிலவி வருகிறது.

Exit mobile version