+2 விடைத்தாள் நகல், மறுக்கூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 19 ஆம் தேதி வெளியான நிலையில் இன்று முதல் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வுகள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற ஒரு பாடத்திற்கு 275 ரூபாயும், மதிப்பெண் மறுகூட்டலுக்கு உயிரியில் பாடம் தவிர்த்து மற்ற அனைத்து பாடத்திற்கும் 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை விண்ணப்பிக்கும் இடங்களியே செலுத்தலாம், மேலும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒப்புகை சீட்டினை பாதுகாப்பாக வைத்து கொண்டு அதில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி இணையதளம் மூலமாகவே விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுக்கூட்டலுக்கு தேவையான நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Exit mobile version