மாமல்லபுரத்தில் உலக பராம்பரிய வார விழா கொண்டாட்டம்

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கலைச்சின்னங்களை இன்று இலவசமாக கண்டு ரசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலக பாரம்பரிய வாரம் இன்று முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில், உலக பாரம்பரிய வார கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், கிருஷ்ணன் மண்டபம், புலிக்குகை, அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்களை இன்று இலவசமாக கண்டு ரசிக்கலாம் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

இந்த கலைச்சின்னங்களை கண்டு ரசிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 600 ரூபாயும், உள்ளுர் சுற்றுலா பயணிகளுக்கு 40 ரூபாயும் என வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version