காவலன் செயலியை மேலும் எளிமையாக்கும் பணி நடைபெற்று வருகிறது: ஏடிஜிபி

காவலன் செயலி மேலும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதியின் உத்தரவின் பேரில், காவலன் செயலியை எளிமையாக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இதுவரை 12 லட்சம் பேர் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பாக ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த 130 பேர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறிய ஏடிஜிபி ரவி, பட்டியல்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.

Exit mobile version