வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

சாயல்குடி பேரூராட்சியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட சாயல்குடி பேரூராட்சியில் 15 ஆண்டுகளாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் புதிய பட்டியல் கணக்கெடுப்பு எடுக்கப்படாமல் இருந்தது. இதனால் புதிய பயனாளிகள் வயதானவர்கள் முதியோர் உதவித் தொகை மற்றும் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் பயன்பெற முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாய தொழிலாளர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளிட்டர்வர்களின் பட்டியலை தயாரிக்க தமிழக அரசு உத்திரவிட்டது. இதன் ஒருபகுதியாக சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் தங்களை இணைத்துகொள்ள தகுந்த ஆவணங்களுடன் பொதுமக்கள் குவிந்தனர். புதிய பட்டியல் தயாரிக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version