மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதி: இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல்

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை நாளை எதிர்கொள்கிறது. லீக் சுற்றுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இதேபோல், பி, பிரிவில், இடம்பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இந்த தொடரில் இந்திய மகளிர் அணி மட்டுமே, தான் விளையாடிய 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிபெற்று வலுவான அணியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், சிட்னியில் நடைபெறும் முதலாவது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. நாளை காலை 9.30 மணிக்கும் தொடங்கும் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version