உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்று இந்திய வீராங்கனை மேரிகோம் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
10வது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில், 48 கிலோ பிளைவெயிட் பிரிவில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஓகோடா ஆகியோர் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், உக்ரைன் வீராங்கனை ஓகோடாவை வீழ்த்தி 6வது முறையாக தங்கம் வென்று மேரிகோம் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம், கியூபா குத்துச்சண்டை ஜாம்பவான் பெலிக்ஸ் சவோனின் சாதனையை மேரிகோம் சமன்செய்துள்ளார். சாதனை படைத்துள்ள மேரி கோமுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Discussion about this post