பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான நடிகர்களுடன் பணி புரிய மாட்டோம் – பெண் இயக்குநர்கள் அதிரடி அறிவிப்பு

மீ டூ என்ற ஹேஸ் டேக் மூலம் திரைத்துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளி உலகிற்கு அம்பலப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தி திரையுலகத்தை சேர்ந்த பெண் இயக்குநர்களான மெக்னா குல்சர், நந்திதாதாஸ், சோயா அக்தர், கொக்கனா சென் சர்மா, கவுரி ஷிண்டே ஆகியோர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதில் பாலியல் புகார்களுக்கு ஆளான நடிகர்களுடன் பணியாற்ற மாட்டோம் என கூறியுள்ளனர். இயக்குநர்கள் என்ற முறையிலும், பெண் என்ற முறையிலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அவர்களது முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே நேரம் பெண் இயக்குநர்கள் பெரிய அளவில் வெற்றிப்படங்களை தராத நிலையிலும், அவர்களது படத்தில் நடிக்க பெரிய நடிகர்கள் ஆர்வம் காட்டாத நிலையில், அவர்களது இந்த அறிவிப்பு அவர்களுக்கே எதிராக திரும்பி விடுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Exit mobile version