கோவையில் வாடிக்கையாளர் போல் நடித்து துணிக்கடையில் திருட்டு

கோவை மாவட்டம் துடியலூரில் வாடிக்கையாளர் போல் நடித்து பட்டப்பகலில் துணிக்கடையில் பெண் ஒருவர் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பெரும்பாலான துணிக்கடைகள், நகைக்கடைகள், செல்போன் கடைகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமிரா முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் அனைத்து குற்ற சம்பவங்களும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டம் துடியலூரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி வணிக வளாகங்களில் பலதரப்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள ஒரு துணிக்கடையில் பெண் ஒருவர் வாடிக்கையாளர் போல் நடித்து துணியை திருடியுள்ளார். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது குறித்து துணிக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் துடியாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version