கடலூரில் பள்ளி ஆசிரியை கொலை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில், பள்ளி ஆசிரியை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறிஞ்சிப்பாடி சின்ன கடைவீதியை சேர்ந்த ரம்யா, தனியார் பள்ளியில் ஆசிரியாராக பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல் இன்றுகாலை பள்ளிக்கு சென்றபோது, ரம்யாவை பள்ளி வளாகத்தில் மறித்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக தாக்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் ரம்யாவின் கழுத்தை அறுத்துவிட்டு அந்த நபர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் சரிந்த ரம்யா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி வளாகத்தில் ஆசிரியை கொடூரமாக கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Exit mobile version