நெல்லை அருகே சொத்து தகராறில் பெண் வெட்டிக்கொலை

நெல்லை அருகே சொத்து தகராறில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் ஆயிரப்பேரி பகுதியை சேர்ந்த சிதம்பரம் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சிதம்பரத்தின் அண்ணன் மகனான கண்ணன் என்பவர் சிதம்பரம் மற்றும் அவரது மனைவி கோமுவை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த கோமு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிதம்பரத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version