101-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய மூதாட்டி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மூதாட்டி ஒருவர் தனது 101-வது பிறந்த நாளை 17 பேரக்குழந்தைகளுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்.

நாமக்கல் மாவட்டம் அணைக்கட்டி பாளையத்தை சேர்ந்தவர் நல்லம்மாள், இவருக்கு 3 பெண்கள் உள்ளனர். அவர்களின் பிள்ளைகளாக 17 பேரக்குழந்தைகளும் உள்ளனர். இவரது கணவர் சுப்பன்ன கவுன்டர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், பெண் பிள்ளைகளின் அரவணைப்பில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார் நல்லம்மாள்.

இந்த நிலையில், நல்லமாளின் 101-வது பிறந்த நாள் விழா இன்று அவரது குடும்பத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நல்லம்மாளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Exit mobile version