கட்சி நிர்வாகிகள் குழு விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன்- விஜய பிரபாகரன்

கட்சி நிர்வாகிகள் குழு விரும்பினால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட விஜய பிரபாகரன் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்ற விஜய பிரபாகரன், அங்குள்ள குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும், தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று பூரண குணமடைந்து விரைவில் சென்னை திரும்புவார் என்றார். தே.மு.தி.க.வில் எந்த ஒரு குழப்பமும் இல்லை என்று விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

Exit mobile version