கணவனின் கண்முன் மனைவியை கடத்திய கும்பல்!

தென்காசியில் பட்டப்பகலில் கணவன் கண் முன்னே, காதல் மனைவி கடத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தென்காசி அடுத்த கொட்டாகுளத்தைச் சேர்ந்த வினித் என்பவரும், செங்கோட்டை பிரானூரைச் சேர்ந்த கிருத்திகா என்பவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் கிருத்திகாவின் பெற்றோர் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் குத்துக்கல்வலசை பகுதியில் வினித் மற்றும் கிருத்திகா காரில் சென்றுகொண்டிருந்த போது அவர்களை கிருத்தாகவின் பெற்றோர் அடியாட்களுடன் மடக்கி, கிருத்திகாவை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுவிட்டனர். இதனையடுத்து வினித் கொடுத்த புகாரின் பேரில், கிருத்திகாவின் பெற்றோர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.YouTube video player

Exit mobile version