சென்னையில் பரவலாக மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

கோடைக்காலம் தொடங்கியதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் கடும் வெப்பம் நிலவிவந்த நிலையில், காலையில் பரவலாக மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், அயனாவரம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், வியாசர்பாடி, வடபழனி, ஈக்காட்டுதாங்கல், ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார இடங்களிலும் மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசிவருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Exit mobile version