தூத்துக்குடியில் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலம்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தோப்பூர் கடற்கரையில் மயங்கிய நிலையில் சிறியவகை திமிங்கலம் கரை ஒதுங்கியது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள தோப்பூர் கடற்கரையில் சுமார் 7 அடி நீளம், 200 கிலோ எடை கொண்ட சிறிய வகை திமிங்கலம் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கியது. திமிங்கலத்தின் வாய்ப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் திமிங்கலம் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் காணப்படும் அரிய வகை உயிரினங்களில் உள்ள திமிங்கலமாக இருக்கலாம் எனவும், ஓங்கல் வகையைச் சேர்ந்த திமிங்கலமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு இதன் முழுமையான விபரம் தெரியவரும்.

Exit mobile version