சிவகங்கை அருகே வெல்டிங் தொழிலாளி வெட்டிக்கொலை

சிவகங்கை அருகே, வெல்டிங் பட்டறை தொழிலாளி மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் அடுத்த நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் காளையார்கோவிலில் உள்ள வெல்டிங் பட்டறை ஒன்றில் பணி புரிந்து வந்தார். இந்த நிலையில், அப்பகுதியில் தனது இரு சக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது திடிரென அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, வினோத் குமாரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுவிட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த வினோத் குமார், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version