இடைத்தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் விரட்டியடிப்போம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இடைத்தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் விரட்டியடிப்போம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தளவாபாளையத்தில் அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு தேர்தலில் வெற்றிபெறுவது குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்றும் எப்போது தேர்தல் நடத்தப்பட்டாலும் வெற்றி பெறுவோம் என்றார். இடைத்தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் விரட்டுகின்ற அளவில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் தேர்தல் பணிகள் அமையும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Exit mobile version