இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னம் தங்களுக்கே கிடைக்கும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் !

பேரறிஞர் அண்ணாவின் 54ஆவது நினைவு தினம் பிப்ரவரி 3ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதனையொட்டி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அஞ்சலி செலுத்த உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு அதிமுக சார்பில் சென்னை வேப்பேரியிலுள்ள காவல் ஆணையரகத்தில் மனு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சி மன்றக்குழு விரைவில் கூடி ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அறிவிக்கும் என்று தெரிவித்தார். வேட்புமனு தொடர்பான ஏ மற்றும் பி பிரிவு விண்ணப்பங்களில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிதான் கையெழுத்திடுவார் என்று விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இரட்டை இலை சின்னம் தங்களுக்குதான் கிடைக்கும என்று திட்டவட்டமாக கூறினார்.

Exit mobile version