போயஸ் கார்டன் இல்லத்தை தாங்கள் கோவிலாக கருதுகிறோம் -அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை தாங்கள் கோவிலாக கருதுகிறோம் என கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் மற்றும் பல்லடம் பகுதிகளில் உழைக்கும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஒரு கோடியே 60 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் 643 பெண்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கோமாரி நோய் தாக்கம் உள்ள ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சிறப்பு குழுக்கள் மூலம் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Exit mobile version