தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் – எஸ்.பி.வேலுமணி

சட்ட விரோதமான முறையில் நிலத்தடி நீரை உறுஞ்சுவதைத் தடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைக் கண்டித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நகராட்சி நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகர குடிநீர் வாரியம் சார்பில் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.

Exit mobile version