சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

கம்பம் சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த ஒரு மாதமாக போதிய மழையின்மையால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் அருவிக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கணிசமான மழைப் பெய்து வருவதாலும், ஹைவேஸ் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் சுருளி அருவியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், சுற்றுலாப்பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version