தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள சண்முகாநதியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள சண்முகாநதியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  உத்தமபாளையத்தில் பாசனத்திற்காக சண்முகாநதியில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் ஆகியோர், சண்முகாநதியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொருத்து கூடுதல் நீர் திறந்துவிடப்படும் என்று கூறினார்.

Exit mobile version