சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விடுமுறை நாட்கள் மாணவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகள் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகப் பள்ளிக்கல்வித் துறைக்கு புகார் வந்துள்ளதாகவும், அவ்வாறு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version