எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் -தொண்டர்களுக்கு துணை முதலமைச்சர் வேண்டுகோள்

எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் என தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க சார்பில் ஆலோசனை கூட்டம், அண்ணா திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், தேனி மாவட்டத்தில் உள்ள இரண்டு இடைத்தேர்தல்களில் மற்ற கட்சி வேட்பாளர்களை காட்டிலும் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் தொண்டர்கள், நிர்வாகிகள் வெற்றி பெற பாடுபட வேண்டும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.

Exit mobile version