மாவட்ட காவல்துறை, பொதுமக்கள் இணைந்து நடத்திய கைப்பந்து போட்டி

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் விதமாக கைப்பந்து போட்டி நடைபெற்றது.

மாவட்ட காவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து நடத்திய கைப்பந்து போட்டியை காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா துவங்கி வைத்தார். ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கைப்பந்து போட்டியை காண்பதற்கு வருகை தந்தனர். துவக்க நிகழ்ச்சியில் பேசிய துணைக் கண்காணிப்பாளர் சுப்பையா பொதுமக்களும் காவல்துறையினரும் இணைந்து சமூக பணியாற்ற கேட்டுக் கொண்டார்.

Exit mobile version