தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை விஷால் சீரழித்துவிட்டார்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை விஷால் சீரழித்துவிட்டதாக முதலமைச்சரை சந்தித்து தயாரிப்பாளர்கள் புகார் அளித்துள்ளனர்

விஷால் தலைமையிலான நிர்வாகம், கூட்டுறவு சங்கங்களின் பதிவு சட்டத்தின்படியும், சங்க உள்விதிகளையும் புறந்தள்ளி செயல்பட்டு வருவதால், சங்கத்தின் மாண்பு மற்றும் கட்டுக்கோப்பு சீர்குலைந்து தயாரிப்பாளர்களின் ஒற்றுமை குறைந்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகம் சீர்குலைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் சங்கத்தை காப்பாற்றும் முயற்சியாக சங்க நிர்வாகத்தை செம்மைப்படுத்தும் வகையில், சிறப்பு அதிகாரியை அரசு நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version